Monday, June 2, 2008

தமிழ்த்தாய் வாழ்த்து

நீராருங் கடலுடுத்த

நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத்

திகழ்பரத கண்டமிதில்

தக்கசிறு பிறைநுதலும்

தரித்தநறுந் திலகமுமே

தெக்கணமும் அதிற்சிறந்த

திராவிடநல் திருநாடும்

அத்திலக வாசனைபோல்

அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ் மணக்க

இருந்தபெருந் தமிழணங்கே!

தமிழணங்கே!

உன் சீரிளமைத் திறம்வியந்து

செயல்மறந்து வாழ்த்துதுமே!

வாழ்த்துதுமே!

-- மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளையவர்கள்.

India News

Powered By Blogger