நீராருங் கடலுடுத்த
நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத்
திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலும்
தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த
திராவிடநல் திருநாடும்
அத்திலக வாசனைபோல்
அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க
இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
-- மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளையவர்கள்.
