Thursday, June 19, 2008

திருக்குறள் (அறத்துப்பால்)1 கடவுள்வாழ்த்து

அறத்துப்பால்
1
கடவுள் வாழ்த்து
-------------------------------------------
1.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

-----------------------------------------------
2.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.

----------------------------------------------------------
3.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்.

---------------------------------------------------------
4.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.

-----------------------------------------------------
5.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

-----------------------------------------------------------
6.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்.

---------------------------------------------------------
7.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது.

-------------------------------------------------------------
8.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது.

------------------------------------------------------------
9.

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை.

-----------------------------------------------------------------
10.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.

---------------------------------------------------------------------

India News

Powered By Blogger