Friday, June 20, 2008

திருக்குறள்(அறத்துப்பால்)4 அறன்வலியுறுத்தல்

அறத்துப்பால்

4

அறன்வலியுறுத்தல்
-----------------------------------------------------------------------
31.

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு.

---------------------------------------------------
32.

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு.

----------------------------------------------------------
33.

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

--------------------------------------------------------------
34.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற.

------------------------------------------------------------
35.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்.

---------------------------------------------------------------
36.

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை.

-----------------------------------------------------------------------
37.

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

-----------------------------------------------------------------------
38.

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்.

------------------------------------------------------------------------
39.

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்

புறத்த புகழும் இல.

---------------------------------------------------------------------
40.

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

உயற்பால தோரும் பழி.

-------------------------------------------------------------------------

திருக்குறள்(அறத்துப்பால்)3 நீத்தார் பெருமை


அறத்துப்பால்

3

நீத்தார் பெருமை

---------------------------------------------------------

21.
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு.

-------------------------------------------------------------
22.

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

----------------------------------------------------------------------
23.

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு.

---------------------------------------------------------------------
24.

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.

--------------------------------------------------------------------------
25.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி.

--------------------------------------------------------------------------------
26.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்.

-----------------------------------------------------------------------------------
27.

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு.

---------------------------------------------------------------------------------
28.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்.

-----------------------------------------------------------------------------------
29.

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது.

----------------------------------------------------------------------------
30.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்.

-----------------------------------------------------------

திருக்குறள்(அறத்துப்பால்)2 வான்சிறப்பு

அறத்துப்பால்

2

வான்சிறப்பு

--------------------------------------------
11.

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

----------------------------------------------------------
12.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை.

--------------------------------------------------------------
13.

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள்நின்று உடற்றும் பசி.

---------------------------------------------------------------
14.

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

வாரி வளங்குன்றிக் கால்.

----------------------------------------------------------------
15.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை.

--------------------------------------------------------------------
16.

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது.

----------------------------------------------------------------
17.

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடின்.

-------------------------------------------------------------------
18.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

------------------------------------------------------------------
19.

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின்.

---------------------------------------------------------------------
20.

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு.

India News

Powered By Blogger