Friday, June 20, 2008

திருக்குறள்(அறத்துப்பால்)3 நீத்தார் பெருமை


அறத்துப்பால்

3

நீத்தார் பெருமை

---------------------------------------------------------

21.
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு.

-------------------------------------------------------------
22.

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

----------------------------------------------------------------------
23.

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு.

---------------------------------------------------------------------
24.

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.

--------------------------------------------------------------------------
25.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி.

--------------------------------------------------------------------------------
26.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்.

-----------------------------------------------------------------------------------
27.

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு.

---------------------------------------------------------------------------------
28.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்.

-----------------------------------------------------------------------------------
29.

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது.

----------------------------------------------------------------------------
30.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்.

-----------------------------------------------------------

No comments:

India News

Powered By Blogger