அறத்துப்பால்
4
அறன்வலியுறுத்தல்
-----------------------------------------------------------------------
31.
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
---------------------------------------------------
32.
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
----------------------------------------------------------
33.
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
--------------------------------------------------------------
34.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
------------------------------------------------------------
35.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
---------------------------------------------------------------
36.
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
-----------------------------------------------------------------------
37.
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
-----------------------------------------------------------------------
38.
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
------------------------------------------------------------------------
39.
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.
---------------------------------------------------------------------
40.
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.
-------------------------------------------------------------------------

No comments:
Post a Comment