Friday, June 20, 2008

திருக்குறள்(அறத்துப்பால்)4 அறன்வலியுறுத்தல்

அறத்துப்பால்

4

அறன்வலியுறுத்தல்
-----------------------------------------------------------------------
31.

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு.

---------------------------------------------------
32.

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு.

----------------------------------------------------------
33.

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

--------------------------------------------------------------
34.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற.

------------------------------------------------------------
35.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்.

---------------------------------------------------------------
36.

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை.

-----------------------------------------------------------------------
37.

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

-----------------------------------------------------------------------
38.

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்.

------------------------------------------------------------------------
39.

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்

புறத்த புகழும் இல.

---------------------------------------------------------------------
40.

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

உயற்பால தோரும் பழி.

-------------------------------------------------------------------------

India News

Powered By Blogger